Tuesday, May 15, 2007

346. இட்லிவடைக்கு நன்றி

இட்லிவடைக்கு நன்றி

"நேற்று மாலையில் தயாநிதி மாறன் சிஐடி நகரில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால் அவரை பார்க்க முதல்வர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் அங்கேயே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. முதல்வர் வெளியே வந்த போது அவரை கோபமாக பார்த்து, "அழகிரி யார் தெரியுமா? அவன் என் மகன்" என்று கூறிவிட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது."

நல்ல மகன் ! நல்ல அப்பா ! வாழ்க தமிழ்த் திருநாடு !

*** 346 ***

Friday, May 11, 2007

பல்லவியும் சரணமும் II - பதிவு 13

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டுபிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

************************************
1. உள்ளத்தை அள்ளத் தான் நாள் பார்த்தது!

2. அலங்கார தேவி முகம், அடங்காத ஆசை தரும் ...

3. மறந்தோம் என்பதே நித்திரையாம், மரணம் என்பது முடிவுரையாம் ...

4. தருவதனால் பெறுவதனால் உறவு தாம்பத்யம் ஆகாதோ ...

5. நாடகம் என்றே நான் நினைக்க, நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க ...

6. கண்களால் உன்னை அளந்தேன், தொட்ட கைகளால் ...

7. தெய்வீகப்பாடல் தாய் சொல்லக் கேட்டு, நான் பாட வந்தேன் ஆனந்தப்பாட்டு ...

8. பாலூட்டும் நிலவு தேனூட்டுமே, பாடும் தென்றல் தாலாட்டுமே ...

9. மலர் போன்ற உன்னைக் கண்டால், கவி பாட பஞ்சமா ...

10. வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது

11. என்னைக் கண்டும் உந்தன் வண்டு விழி நாணுமோ ...

12. தங்க முகமே, நீ தரையில் வந்த வெண்ணிலா, கன்னி மலரே, நீ மலர்ந்ததென்ன கண்ணிலா ...
**********************************

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

 

Tuesday, May 08, 2007

344. அப்டி போடு அருவாள !

டி.ஆர்.பாலு தான் நம்பர் ஒன் அமைச்சர் * சொல்கிறார் ராமதாஸ்

அமைச்சர்களில் டி.ஆர்.பாலு தான் நம்பர் ஒன் அமைச்சராக செயல்படுகிறார் என்று பா.ம.க. தலைவர் ராம்தாஸ் கூறினார். சென்னையில் பா.ம.க. தலைவர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:

சிமென்ட் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. பருப்பு, எண்ணெயை பாக்கெட் செய்து ரேஷன் கடைகளில் வினியோகிப்பது போல் சிமென்டையும் இறக்குமதி செய்து ரேஷன் கடை அல்லது டாஸ்மாக்கில் விற்பனை செய்ய வேண்டும்(!). விரைவில் சிமென்ட் விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும்.

பீடி பண்டல்களில் மண்டை ஓடு வருகிறது. இதை அகற்ற மத்திய சுகாதார அமைச்சருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியது பீடி முதலாளிகளின் குரலாகவே எதிரொலிக்கிறது. ஆனால், விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு முதல்வர் கருணாநிதி இதுவரை கடிதம் எழுதாதது ஏன்?

ரிலையன்ஸ் நிறுவனங்களுடன் சில்லரை வர்த்தகர்கள் போட்டி போட வேண்டும் என்று மத்திய அமைச்சர் தயாநிதி கூறுவது, அனில் அம்பானியுடன் சாதாராண ஆறுமுகம் போட்டி போட முடியுமா என்று கேட்பது போல் உள்ளது.
 
மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பதாக கூறப்பட்டிருப்பது சூப்பர் கணிப்பு. கருத்துக் கணிப்பு நடத்திய நிறுவனத்தின் கணிப்பு பல முறை தவறாகியுள்ளது.  இவர்களாகவே ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டு மகிழ்ச்சி அடைகின்றனர். அமைச்சர்களில் டி.ஆர்.பாலு நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் பணிகளை சிறப்பாக செய்துள்ளார். முதலிடம் அவருக்குத் தான் கொடுத்திருக்க வேண்டும்.

(Side comment: மாறன் குடும்பத்து நாளிதழான தினகரனில் வெளியாகியுள்ள அந்த சர்வே, டாக்டர் ராமதாஸை மிகுந்த கோபத்துக்குள்ளாக்கியிருக்கிறது.  தமிழகக் கட்சிகளிலிருந்து தில்லி சென்றிருக்கும் அமைச்சர்களில், தயாநிதி மாறனே அதிக நிர்வாகத் திறமை மிக்கவராக அந்த சர்வே கூறுகிறது.  அவர் 64% ஓட்டுகளை அந்த சர்வேயில் பெற்றுள்ளார். அவரை அடுத்து, அதிக ஓட்டுகள் பெற்றவர்கள் ப.சிதம்பரம் மற்றும் டி.ஆர்.பாலு.

டாக்டர் அன்புமணி 1% ஒட்டுகளே பெற்றிருப்பதாக அந்த சர்வே கூறியிருப்பதே, மருத்துவரின் கோபத்துக்குக் காரணம். இதன் மூலம், முதலமைச்சர் மலிவான அரசியல் செய்வதாகவும் டாக்டர் குற்றம் சாட்டியுள்ளார்.)

அன்புமணியை உலக அளவில் புகழ்கின்றனர். தயாநிதி மாறனுக்கு நூற்றுக்கு நூறு மார்க் கூட போட்டுக் கொள்ளுங்கள். அதற்காக அன்புமணியை இழிவுப் படுத்தாதீர்கள். தமிழக அரசியலில் இதுவரை இந்த நிலை வந்ததில்லை. இதன் மூலம் புதிய நாகரிகத்தை தமிழகத்தில் புகுத்துகின்றனர். தமிழக மக்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தி.மு.க. கூட்டணி கட்சியில் தொடர்ந்து நீடிப்போம். ஐந்து ஆண்டுகளும் ஆதரவு தருவோம். ஆனால், ஜால்ரா மட்டும் போட மாட்டோம்.  இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

(Final comment: ஒரே குழப்பமா இல்லை ;-))

நன்றி: தினமலர்

*** 344 ***

Thursday, May 03, 2007

343. திருமலை அனந்தாழ்வான் வைபவம்

கடந்த ஆயிரம் ஆண்டுகளின் மிகச் சிறந்த ஸ்ரீவைஷ்ணவர் என்ற பட்டத்துக்குரியவர் ஆச்சார்யன் ராமானுனஜர் ஒருவரே என்றால் அது மிகையாது. இந்து மதத்திற்கு புத்துயிர் ஊட்டி, மதச்சூழல் புதுப்பொலிவு பெற உழைத்த மகான்களில் தலையானவர். ஆழ்வார்களுக்கு அடுத்தபடியாக, ஆழ்ந்த உணர்வுபூர்வமான இறையன்பை மட்டுமே முன் நிறுத்திய புது மதப்பாரம்பரியத்தை நிறுவியதில் இராமனுஜருக்கு முக்கியப் பங்கு உண்டு. சாதி பேதம் பாராமல், வைணவம் சார் மாந்தர் அனைவரையும், திருமாலின் அடியவராகப் பார்த்த மகான் 'உடையவர்' என்று போற்றப்படும் எந்தை இராமனுச முனி ஆவார். திருமால் மேல் அன்பும், பக்தியும் கொண்டு, அவனிடம் பூரண சரணாகதி அடையும் அடியவர் அனைவரும் வைணவரே என்பதில் மிக்க நம்பிக்கை கொண்டவர் இராமனுசர்!

ராமானுசருக்கு, இளையபெருமாள், எம்பெருமானார் என்ற திருநாமங்களும் உண்டு.
அவர் இயற்றிய பல நூல்களில் முக்கியமானவையாகக் கருதப்படுபவை:

1. கீதா பாஷ்யம்
2. ஸ்ரீ பாஷ்யம்
3. வேதாந்த சங்க்ரஹம்
4. வேதாந்த சாரம்
5. வேதாந்த தீபம்
6. கத்யத்ரயம்
7. நித்ய க்ரந்தம்

அப்பேர்பட்ட புகழ் வாய்ந்த இராமனுசரின் தலையாய சீடரே, திருமலை அனந்தார்யா! அக்காலத்தில், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருமலைக் கோயிலும், சுற்றுப்புறமும் மிகவும் பாழ்பட்டுக் கிடந்ததைக் கண்ட ராமானுஜர், தனது சீடர்களை அழைத்து, திருமலைக் கோவிலையும், சுற்றுப்புறத்தையும் சீர்படுத்தி பராமரிக்கும் பொறுப்பை எவர் ஏற்க விரும்புவதாக வினாவெழுப்பினார். கடினமான வாழ்க்கைச் சூழலுக்கு அஞ்சி, பலரும் வாய் மூடி இருந்தபோது, அனந்தார்யா, தான் திருமலை சென்று உபயம் செய்ய ஒப்புக் கொண்டார்.

திருமலையில் அனந்தாழ்வான்
----------------------
Photo Sharing and Video Hosting at Photobucket
அவரை ஆரத்தழுவிய ராமானுஜர், "அனந்தார்யா, நீயே ஆண்பிள்ளை!" என்று கூறவே. அன்றிலிருந்து, அவர் திருமலை 'அனந்தாண்பிள்ளை' என்று போற்றப்பட்டார். ஆச்சார்ய கட்டளையின் பேரில், திருமலை சென்ற அனந்தார்யா, அங்கு ஒரு பூவனத்தை நிறுவி, பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்தார். அத்தோடு, ஒரு கிணறு வெட்டி, அதற்கு ராமானுஜர் என்ற பெயர் சூட்டினார். அனந்தார்யா திருமலையில் செய்த பகவத் கைங்கர்யத்தின் பலனாக, பன்னிரு ஆழ்வார்களுக்கு இணையாகக் கருதப்பட்டு, அனந்தாழ்வான் என்ற திருநாமம் பெற்றார்.

அவர் மைசூருக்கு அருகே உள்ள சிறுபுத்தூர் என்ற கிராமத்தில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் அவதரித்து, ராமானுசரின் மேன்மையால் ஈர்க்கப்பட்டு அவரிடம் சீடராகச் சேர்ந்தவர். இராமனுசர் திருமலையில் தரிசிக்க வந்தபோது, அனந்தாழ்வான் நிறுவிய மலர் தோட்டத்திலிருந்த மல்லிகை, முல்லை, இருவாட்சி, ரோஜா, அல்லி, அளரிச் செடிகளையும் தவனம், மரு, மகிழ, வகூல, படால, புன்னாக, செண்பக மரங்களையும் கண்டு மனமகிழ்ந்து, அனந்தனை நோக்கி, "அனந்தார்யா, உன்னைச் சீடனாகப் பெற்றதின் பலனை இன்று அடைந்தேன்" என்று கூறினார்.

முதன்முதலில் அத்தோட்டத்தில் பூப்பூத்த மகிழ மரத்தின் மேல் அனந்தனுக்கு தனிப்பற்று!
இன்றும் உத்சவரான மலையப்ப சுவாமி, வனபோஜன உற்சவத்தின்போது இந்த மகிழ மரம் முன் எழுந்தருளுகிறார்! அந்த மகிழ மரத்துக்கே அனந்தன் நினைவாகப் பரிவட்ட மரியாதையும் தரப்படுகிறது. அத்தோட்டம், இப்போது 'அனந்தாழ்வான்' தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது.

கொஞ்சம் கோபக்காரரான அனந்தார்யா, ஒரு முறை தனது நிறைமாத கர்ப்பிணியான மனைவிக்கு தோட்டத்தில் உதவி செய்ய முற்பட்ட சிறுவன் ஒருவனை (தான் மட்டுமே திருவேங்கடமுடையானுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அதீத விருப்பத்தில் ஏற்பட்ட சினத்தால்) கடப்பாரையால் தாடையில் அடித்து விட்டார். அச்சிறுவனைத் அவர் துரத்திச் சென்றபோது, அவன் கோயிலுக்குள் நுழைந்து மாயமாய் மறைந்து விட்டான். கோயில் அர்ச்சகர்கள், மூலவப் பெருமாளின் தாடையில் ரத்தம் வருவதைக் கண்டு, அனந்தார்யாவிடம் கூறினர். சிறுவனாக வந்தவர் பெருமாளே என்பதை உணர்ந்த அனந்தார்யா, அடிபட்ட தாடையில் பச்சைக் கற்பூரம் வைத்து, தன்னை மன்னித்தருளுமாறு மனமுருக வேண்டினார்! இரத்தம் வருவதும் நின்றது! இன்றும், திருமலை கோபுர வாசலில், வடதிசைச் சுவரின் மேற்புறத்தில், 'அந்தக்' கடப்பாரையைக் காணலாம்! அது போலவே, அனந்தன் நினைவாக, இன்றும், மூலவரின் தாடையில், பச்சைக் கற்பூரம் சாத்தப்படுகிறது. அது பிரசாதமாகவும் பக்தர்களுக்கு அளிக்கப்படுகிறது.

ஆதிசேஷனின் அம்சமாகக் கருதப்படும் அனந்தாழ்வான் வைபவத்தில் ஒரு அழகான நிகழ்வு கூறப்பட்டுள்ளது.

காஞ்சியில் அனந்தாழ்வான்
--------------------
Photo Sharing and Video Hosting at Photobucket
ஒரு முறை, அடியார்கள் சிலர், திருவேங்கடமுடையானை தரிசிக்க திருமலையில் ஏறிக் கொண்டிருந்தனர். அவர்கள் மிகவும் களைப்புடனும், பசியுடனும், தாகத்துடனும் இருந்தபோது, பெருமாள் ஒரு பிரம்மச்சாரி வடிவில் அவர்கள் முன் தோன்றி, பிரசாதமும், நீரும் வழங்க முற்பட்டார். அடியார்களோ, பெருமாளிடம் அவர் யாரென்றும், அவரின் ஆச்சார்யன் பற்றியும் அறியாமல், தாங்கள் அவர் தருவனவற்றை ஏற்க இயலாதென்று கூற, பெருமாள் தான் அனந்தாழ்வானின் சிஷ்யன் என்றும், அவர் தான் தன்னை உதவ அனுப்பியதாகவும் கூறினார் !!! அடியார்கள் நம்ப மறுத்து, பெருமாளிடம் அவரது 'ஆச்சார்ய தனியனை' கூறுமாறு பணித்தனர். உடனே, பிரம்மச்சாரி வடிவில் வந்த பெருமாளே, பிரசித்தி பெற்ற இந்த தனியனின் முதல் பாகத்தை இயற்றினார்:

அகிலாத்ம குணாவாஸம் அஜ்ஞான திமிராபஹம்

ஆச்ரிதாநாம் ஸ¤சரணம் வந்தே நந்தார்ய தேசிகம்


அடியார்கள், ராமநுசரின் (உடையவரின்) சம்பந்தம் தெளிவாகக் கூறப்படவில்லை என்று ஐயப்பட்டபோது, பெருமாள் தனியனின் இரண்டாவது பாகத்தை எடுத்துரைத்தார் !

ஸ்ரீமத் ராமாநுஜாசார்ய ஸ்ரீபாதாம் போருஹத்வயம்

ஸதுத்தமாங்கஸந்தார்யம் அனந்தார்ய மஹம்பஜே !


தனியனை ஏற்றுக் கொண்ட அடியார்கள், பெருமாள் தந்த பிரசாதத்தையும், நீரையும் ஏற்றுக் கொண்டனர்.

தமிழில், "ஏய்ந்தபெருங் கீர்த்தி" என்ற திருவாய்மொழித் தனியன் பாடல் அனந்தன் எழுதியதே. 'வேங்கடாசல இதிகாசமாலா' என்ற வடமொழி நூல் திருவரங்கத்தின் 'கோயில் ஒழுகு'க்கு இணையானதாகப் போற்றப்படுகிறது. அவர் இயற்றிய 'ராமானுஜ சௌத்ஸ்லோகி' என்ற நூலில், திருமலை, காஞ்சி, மேல்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய நான்கு புண்ணியத் தலங்களும் தனது ஆச்சார்யனான இராமனுஜரின் இதயத்துக்கு அருகே உள்ளவையாக விவரிக்கிறார். அது போலவே, 'கோதா சௌத்ஸ்லோகி' என்ற நூலில், ஆண்டாளின் பெருமையை, மிக அழகாக, உணர்வு பூர்வமாக, வாசிப்பவரை ஈர்க்கும் வண்ணம் சொல்லியிருகிறார்!

புண்ணிய மூவரான, இராமனுஜர், பெரிய திருமலை நம்பி, அனந்தாழ்வான் ஆகியோர் சேர்ந்து,வைகான்ஸ ஆகம வழிப்பாட்டை திருமலையில் நிலைப்படுத்த வேண்டி, 'பெத்த ஜீயங்கார் மடத்தை' நிறுவினர். தனது ஆச்சார்யனான இராமனுஜர் மீது அளவு கடந்த பக்தியும், பாசமும் கொண்டவராக விளங்கினார் அனந்தாழ்வான், குருவின் வாக்கே வேதவாக்கு என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார்! உடையவர் இராமனுசரின் சன்னிதியை திருமலையில் அனந்தன் நிறுவினார். அங்குள்ள விக்ரகம், ஸ்ரீபெரும்புதூர், ஸ்ரீரங்கம் மற்றும் திருநாராயணபுரத்தில் உள்ள உடையவர் மூர்த்திகளை விட தொன்மையானது என்று அறியப்படுகிறது. இராமனுஜர் சன்னிதியில் உள்ள சடாரி, 'அனந்தாழ்வான்' என்றே அழைக்கப்படுகிறது.

அனந்தாழ்வானின் கூரிய ஞானத்தை எடுத்துக் காட்டும் நிகழ்வு ஒன்றைக் கூறி, வைபவத்தை நிறைவு செய்கிறேன்.

ஒரு சமயம், ஸ்ரீரங்கத்து பட்டர் (ராமானுஜரின் சீடர்) தனது சீடனை, அனந்தாழ்வானிடம் அனுப்பி, 'உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்' யாரென்று அறிந்து வரச் சொன்னார். அனந்தாழ்வான் சீடனிடம், " உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் என்பவன், ஒரு நாரை போல், ஒரு கோழியைப் போல, உப்பைப் போல, உன்னைப் போல இருப்பவன்" என்று கூறினார்!!! பொருள் விளங்காத அந்த சீடனுக்கு, பின்னாளில் பட்டர் அந்த வாக்கியத்தின் உட்பொருளை விவரித்தது சுவையானது.

'நாரையைப் போன்றவன்' என்பதற்கு, உண்மையான ஞானத்தைக் கொண்ட ஆச்சார்யனை சரணடைய காத்திருப்பவனாகவும், 'கோழியைப் போன்றவன்' என்பதற்கு, வேதங்களின் சாரமான திருவாய்மொழியை நான்கு வேதங்களிலிருந்தும் சிறந்ததாக பிரித்தெடுக்க வல்ல திறமை மிக்கவனாகவும், 'உப்பைப் போன்றவன்' என்பதற்கு, பகவத், பாகவத, ஆச்சார்ய கைங்கர்யங்களில் கரைபவனாகவும், 'உன்னைப் போன்றவன்' என்பதற்கு, அகந்தையும், ஆணவமும் இல்லாதிருப்பவனாகவும் உட்பொருள் அமைந்திருப்பதை, பட்டர் அந்த சீடனுக்கு விளக்கமாக எடுத்துரைத்தார்.

ஆச்சார்ய பக்திக்கு உன்னதமான எடுத்துக்காட்டாக வாழ்ந்த அனந்தாழ்வான் புண்ணிய திருவாடிப் பூரத்து நாளில், ஆச்சார்யன் திருவடி அடைந்தார்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 343 ***

Tuesday, May 01, 2007

Appraisal - Managerial Tips "in English" - Part 2

தமிழில் இந்தக் கட்டுரையை வாசிக்க இங்கு சுட்டவும்.

Pl.read PART 1 and then proceed. In the previous posting, I had given 5 tips ! So, I will proceed with the 6th point.

6. The act of 'Setting Goals' (to the appraisee) should be done with clarity, foresight and long term planning. This is best illustrated by a real-life example!

When one of America's old and reputed university building was constructed, the site engineer had used timber (from a particular type of tree that grows tall and strong) for the beams and columns. After nearly 200 years, an experts' group was assembled to ascertain the fitness of the university building.

The experts found a long wooden beam that ran across the main hall of the building to have become weak because of wear and tear and recommended a replacement. Also, they put forth many other recommendations to strengthen the building structure after going through the building drawings in the old 'blue print' room. The experts were perplexed to see a small map (with directions leading to a specific area in the nearby forest marked clearly) attached to the main drawing.

When the experts went to the forest area marked in the map, they found a uniform rows of fully grown trees. They discovered to their amazement that the timber that had been used during the construction of the building (200 years ago) had come from similar type of trees.

The site engineer, at that time itself, with foresight and long term planning, had sown the seeds of that particular type of tree, in the nearby forest area. Those seeds have become giant trees and were standing tall in front of the amazed group of experts !

Since the site engineer realized that after many years the wooden columns and beams might have to be replaced and acted with foresight, it was possible to renovate the university building to its old pomp and splendour !

7. The skill of the manager lies in subtly making the employee (who is being appraised) understand that there is an hierarchy (authority) above the manager himself and that the manager is answerable to that authority! This essentially makes the employee realize that the manager can satisfy only some of his/her requirements and not all!

8. What is "OBJECTIVENESS" ?
To explain this clearly, the trainer gave a good example. In the company the trainer was working earlier, his manager appraised the trainer's colleague, in the marketing division. After the appraisal, the colleage looked crestfallen. Seeing this, after taking permission from his manager, the trainer spoke to the colleague. He found out that the person had come from a rural background that gave him a disadvantage in terms of self confidence and command over English. Still, with his hard work, he had achieved around 80% of the target assigned to him. Though the trainer had achieved more than his target, he was able to appreiciate the contribution of his colleague. That is OBJECTIVENESS!

To explain further, the trainer put forth a question, "If a very poor man donates Rs.100 (all that he has as savings) as contribution to the Tsunami relief fund and if a millionaire dontes Rs.10 lakhs to the same fund, whose contribution will you consider as really HIGHER ?" and made us understand the concept of OBJECTIVENESS :)

9. There is one important aspect of appraisal:
An appraiser has a responsibility in the performance of the appraisee!

To ensure this, a manager needs to set "Stertch Goals" to an employee working under him! By this, the manager is forced to provide "responsible support" to the employee to achieve his/her goals! The performance of the employee becomes the responsibility of the manager to some extent!

Also, the employee is able to move from his/her comfort zone to his/her courage zone and contribute better. This is a win-win situation for both the manager and the employee.

10. To illustrate his point, the trainer gave the example of the process of bring-up of an eagle young one.

Initially, eagle parents construct a comfortable nest on top of a cliff, for the young one, provide sumptuous amount of food, protect it from many dangers and generally are very supportive to make the young one's life happy and comfortable. That is, the young one is kept in the "COMFORT" zone by its parents

After sometime, as the young one grows, the parents dismantle the nest slowly exposing it to hot and cold weatherand also reduce the food supply. The parents often push it from the nest and when the young one starts flapping the wings and is about to hit the ground save it. Slowly and steadily it learns the art of flying !!!

The eagle parents are actually pushing the young one into the COURAGE zone to prepare the young one for a life without parental support. A manager needs to behave like the eagle parents with his employee (young one)!

11. A manager needs to understand the simple fact that all employees (working under him) cannot be SIMILAR. After all, each finger is UNIQUE! Some managers do not even grasp this. Also, a manager should NEVER compare one employee with another.

There is a type of bamboo in china, that grows very slowly in the first 5-6 years and in the next 5-6 weeks, it reaches an astonishing height of 90 feet! Like the chinese bamboo, there will be some employees who may take a longer time to learn at work (Learn it slow but good!). But, the manager should have the foresight to realize that in the long run, those employees are likely to be potential assets to the organization.

12. Individual aspirations are as IMPORTANT as the Organizational expectations. A manager's duty is to understand this and act accordingly.

13. The WORK PLACE should ideally be like a COLLEGE CAMPUS, where BUSINESS can be equated to CURRICULUM, MANAGERS / PROJECT LEADS can be equated to TEACHERS and CUSTOMERS can be equated to the DRIVE. The above four form the PILLARS of the building called ORGANIZATION.

The foundation of this building is the EMPLOYEES and the TOP ROOF is the TECHNOLOGY (Technology is the ENABLER!).

If the environment is such as above, there is bound to be abundant goodwill between the managers and the employees.

14. Finally, we will look at the 2 golden rules of APPRAISAL:
(i) During the appraisal, you COMMUNICATE, not SPEAK!
(ii) NEVER postpone the appraisal discussion and NEVER allow interruptions during the appraisal session!

I think, I have bored you enough by lecturing! Thanks for reading patiently!

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 342 ***

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails